Wednesday, March 7, 2012

Tamil Fonts

சிறப்பு ஆசிரியர் பணி நியமன ஆணை

அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட 16,548 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால் சனிக்கிழமை முதல் தபாலில் அனுப்பப்படுகிறது. 

அரசாணையில் தெரிவிக்கப்பட்டபடி, தேர்வு பட்டியல் பள்ளிக்கல்வி இணையதளத்திலோ, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக தகவல் பலகையிலோ வெளியிடப்படவில்லை.

பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு மார்ச் 16


பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அறிவிப்புகள்.


*  பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு மார்ச் 16 முதல் 26 வரை நடைபெறும்.
 செய்முறைத் தேர்விற்கு பாட ஆசிரியர்கள் அக தேர்வராகவும், வேறு பள்ளி அறிவியல் ஆசிரியர் புறத்தேர்வராகவும் செயல்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


* புறத்தேர்வர் சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலரால் நியமனம் செய்யப்படுவர். புதுச்சேரியை பொருத்தவரை புதுச்சேரி முதன்மைகல்வி அலுவலரால் நியமனம் செய்யப்படுவர்.
*  அறிவியல் பாடத்தில் மொத்தம் 100 மதிப்பெண்ணில் எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்ணும், செய்முறைத் தேர்வுக்கு 25 மதிப்பெண்ணும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
*  எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 20 மதிப்பெண்ணும், செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 15 மதிப்பெண்ணும் பெற வேண்டும்.


* மாற்றுத்திறனுடைய மாணவர்கள் சொல்வதை எழுதுபவர் (SCRIBE) பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது மாற்றுத்திறனுடைய மாணவர்கள் விரும்பினால் கருத்தியல் தேர்வில் 75 மதிப்பெண்களுக்கு மாணவர்கள்   பெற்ற மதிப்பெண்களை 100 க்கு மாற்றி வேறுபாட்டை செய்முறை மதிப்பெண்ணாக கொள்ளலாம்.
*  பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வை மொத்தம் இரண்டரை மணி நேரம் நடத்த வேண்டும்.
*  இயல் அறிவியல் பாடத்துக்கு ஒன்றேகால் மணி நேரமும்,  உயிர் அறிவியல் பாடத்துக்கு ஒன்றேகால் மணி நேரமும் தேர்வு நடத்த வேண்டும்.
*  காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இரு வேளைகளிலும் செய்முறைத் தேர்வுகளை நடத்த வேண்டும்.
*  பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் பாடத்தில் மொத்தம் 16 வகையான செய்முறைகள் உள்ளன.
*  இந்த செய்முறைகள் தொடர்பான வினாக்களை குலுக்கல் முறையில் மாணவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும்.

* கணக்கீடு வினாக்களுக்கு ஒரு கணக்கீடு எடுத்தால் போதுமானது.

 *  செய்முறைத் தேர்வு (மொத்தம் 25 மதிப்பெண்):
*  புற மதிப்பீடு: 20 மதிப்பெண்
இயல் அறிவியல் | பாடக்குறியீடு எண் - 08:
இயற்பியல் (ஒரு வினா) - 5 மதிப்பெண்,
வேதியியல் (ஒரு வினா) - 5 மதிப்பெண்,
மொத்த மதிப்பெண்கள் : 10
உயிர் அறிவியல் | பாடக்குறியீடு எண் - 10:
தாவரவியல் (ஒரு வினா) - 5 மதிப்பெண்,
விலங்கியல் (ஒரு வினா) - 5 மதிப்பெண்,
மொத்த மதிப்பெண்கள் : 10
*  அகமதிப்பீடு: 5 மதிப்பெண்
மாணவர்களின் ஆய்வுக்கூட வருகை - 1  மதிப்பெண்  
மாணவர் ஆய்வக செயல் திறன் - 1  மதிப்பெண்  
மாணவர் ஆய்வக ஈடுபாடு - 1  மதிப்பெண்  
ஆய்வக பதிவுக் குறிப்பேடு - 2  மதிப்பெண்  
மொத்த மதிப்பெண்கள் : 5
மொத்த மதிப்பெண் -25
* செய்முறைத் தேர்வு நடத்தப்படும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் அந்த செய்முறைத் தேர்வு மையத்தின் தலைமைக் கண்காணிப்பாளராக செயல்பட வேண்டும்.
* செய்முறைத் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தலைமை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டும்.
* செய்முறைத் தேர்வு கால அட்டவணையை தலைமைக் கண்காணிப்பாளர்களே தனிக் கவனம் செலுத்தி தயாரிக்க வேண்டும்.
* செய்முறைத் தேர்வு முடிந்த பிறகு மதிப்பெண் பட்டியல்களை மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.விடைத்தாள்கள், வினாக்கள் பட்டியலையும் மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
*  இந்த செய்முறைத் தேர்வுகளை அந்தந்த பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையிலேயே நடத்தி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மதிப்பெண் பட்டியலை அனுப்ப வேண்டும்.
*  இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை சுமார் 10.75 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
* செய்முறைத் தேர்வுக்கு வராதவர்களின் பதிவெண்களைப் பாட வாரியாகக் குறிப்பிட்டு, அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர்(பணியாளர்), சென்னை -600006 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
* செய்முறைத் தேர்வை எந்தவிதப் புகாருக்கும் இடமின்றி நடத்துவது மாவட்டக் கல்வி அலுவலரின் பொறுப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TET அறிவிப்பு

TET அறிவிப்பு : ஜுன் 3-ந்தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 22.03.12 முதல் 04.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.


* குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டத்தை, அரசிதழில், தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

*   6 முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்க, இச்சட்டம் வழிவகை செய்கிறது.

* கட்டாயக் கல்விச் சட்டப்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, தகுதி தேர்வு நடத்தி தான், மாநில அரசுகள் நியமித்தாக வேண்டும்.

*  இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி, ஆசிரியர்களை நியமிக்கும் பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும்.

*  இந்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு ஜுன் 3-ந்தேதி நடைபெற உள்ளது.

*  ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 22.03.12 முதல் 04.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.

*  தேர்வில், அனைத்து கேள்விகளும், நான்கு பதில்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும், ஒரு மதிப்பெண் அளிக்கப்படும்.

*  இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (முதல் தாள்), ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (இரண்டாம் தாள்) இடம்பெறும். எந்த வகுப்பு வேண்டுமானாலும் எடுக்க தயாராக உள்ளவர்கள், இரண்டையும் எழுத வேண்டும்.

*   முதல் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொண்டதாகவும் இருக்கும். மொத்த மதிப்பெண் 150
                1. Child Development and Pedagogy       -              30 மதிப்பெண்
                2. Tamil or other language                        -              30 மதிப்பெண்
                3. English                                                  -              30 மதிப்பெண்
    4. Maths                                                    -              30 மதிப்பெண்
    5. Environmental studies                           -              30 மதிப்பெண்
* இரண்டாம் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் உள்ளதாகவும் இருக்கும்.
1. கணித ஆசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியர் :
    1. Child Development and Pedagogy       -              30 மதிப்பெண்
                2. Tamil or other language                        -              30 மதிப்பெண்
                3. English                                                  -              30 மதிப்பெண்
    4. Maths and Science                                -              60 மதிப்பெண்
2. சமுக அறிவியல் ஆசிரியர் :
    1. Child Development and Pedagogy       -              30 மதிப்பெண்
                2. Tamil or other language                        -              30 மதிப்பெண்
                3. English                                                  -              30 மதிப்பெண்
    4. Social Studies                                        -              60 மதிப்பெண்
2. இரண்டும் போதிப்பவர்களுக்கு :
    1. Child Development and Pedagogy       -              30 மதிப்பெண்
                2. Tamil  or other language                       -              30 மதிப்பெண்
                3. English                                                  -              30 மதிப்பெண்
    4. Maths, Science and Social Studies        -              60 மதிப்பெண்
* சில தனியார் பள்ளிகளில் 1-முதல் 8 வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் சில வகுப்புகளை எடுக்கலாம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் Maths, Science and Social Studies என இரண்டும் எழுதவேண்டும்.

* தேர்வில் 60 சதவீத மதிப்பெண் அதாவது 150 க்கு 90 மதிப்பெண் பெறுவோர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.

* தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் (1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் ஆசிரியர் பட்டயப் படிப்பை டி.டி.இ.டி., முடித்திருக்க வேண்டும்.அவர்கள் முதல் தாள் எழுத வேண்டும்.

* பட்டதாரி ஆசிரியர்கள் (6 முதல் 8 வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் பி.எட். படித்திருக்க வேண்டும். அவர்கள் இரண்டாம் தாள் எழுத வேண்டும்.

* அதன்படி தமிழ்நாட்டில் 23-8-2010-ந் தேதி அன்றோ அதற்கு பின்னரோ ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதிதேர்வை எழுதவேண்டும். இந்த தேர்வை 5 ஆண்டுகளுக்குள் எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.

* ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விண்ணப்பம் மார்ச் 22-ந்தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் கிடைக்கும்.

* விண்ணப்பத்தின் விலை ரூ.50.
* விண்ணப்பம் கொடுக்கும் போது அதில் ஒரு வங்கிச்செல்லான் இருக்கும். அதை யாரும் தொலைக்காமல் பத்திரமாக வைத்து அந்த செல்லானை பூர்த்தி செய்து`ஸ்டேட் பாங்க்'கில் ரூ.500 செலுத்தவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கவேண்டும். அவ்வாறு ஒப்படைக்க ஏப்ரல் 4-ந்தேதி கடைசி நாள்.

* ஆசிரியர் தேர்வு எழுத பாடத்திட்டம் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

*  லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.